Last Updated : 15 Apr, 2022 11:44 AM

 

Published : 15 Apr 2022 11:44 AM
Last Updated : 15 Apr 2022 11:44 AM

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த விதிப்படி இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: திண்டுக்கல்லில் 2014-ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு, 2016-ம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி சட்ட திருத்த விதிப்படி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் 2014-ல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சத்திரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கேட்டு 2014-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்கின் தற்போதைய நிலை அடிப்படையில் ரூ.1.80 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x