Published : 15 Apr 2016 09:48 AM
Last Updated : 15 Apr 2016 09:48 AM
புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்றும், நாளையும் (ஏப்ரல் 16) வெளியிடப்படும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி, கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறது. இதையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் கரூர் மாவட்டம் மாயனூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மாற்றத்தை விரும்பும் மக்கள், திமுகவின் பலமான கூட்டணி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவை திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். திமுகவின் தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த தேர்தல் அறிக்கையை வீடுவீடாகச் சென்று வழங்கினாலே, மகத்தான வெற்றி கிடைக்கும். அதிமுக பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கிறது. இந்த தேர்தலில் பணம் எடுப்படாது. மக்கள் ஏமாற மாட்டார்கள்.
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பல கிராமங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT