Published : 10 Apr 2022 04:15 AM
Last Updated : 10 Apr 2022 04:15 AM

திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் திருண்ணாமலை அறிவொளி பூங்கா முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசைக் கண்டித்தும் மற்றும் விலை உயர்வு, வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ், அருள் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அடுப்பு பற்ற வைத்து தங்களது எதிர்ப்பை பெண்கள் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x