Published : 25 Apr 2016 09:03 AM
Last Updated : 25 Apr 2016 09:03 AM
பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தமிழகத்தில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும். திமுக, அதிமுக கட்சிகளுக்கு கட்சிக ளுக்கு அடுத்து அதிக வாக்கு சதவீதம் உள்ள கட்சி பாஜக. தமிழ கத்தில் மாற்று அரசியல் கலாச் சாரத்தை பாஜக கொண்டுவரும்.
இந்த தேர்தலில் வாக்குகளுக்கு பணம் கொடுக்க தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலர் கள் சிலரும் உதவி செய்கின்றனர். ஓட்டுக்கு பணம் தரும்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் தேர்தலில் பணம் தந்தவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT