Last Updated : 31 Mar, 2022 11:10 AM

 

Published : 31 Mar 2022 11:10 AM
Last Updated : 31 Mar 2022 11:10 AM

ஜெகதாபட்டினம் மீனவர்கள் 3 பேர் கைது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: எல்லை தாண்டி வந்தாகக் கூறி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 102 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (மார்ச் 30) கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம்(50), சக்திவேல்(38), கலைமாறன்(29) ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடரும் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்கவும், மீனவர்களையும், படகையும் மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x