Published : 18 Mar 2022 11:21 AM
Last Updated : 18 Mar 2022 11:21 AM

தமிழக பட்ஜெட் 2022-23: விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அரசு அருங்காட்சியகங்கள்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொது பட்ஜெட் 2022-23-ஐ சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள்: > விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்.

> தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல் பழங்கால அகழ்வைப்பகம், தருமபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களை அவற்றின் தனித்துவம் மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு, இக் கட்டடங்களுக்கு இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> இம்மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x