Published : 25 Apr 2016 01:10 PM
Last Updated : 25 Apr 2016 01:10 PM

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வேட்புமனு தாக்கல்

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் கருணாநிதி இன்று (திங்கள்கிழமை) மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்து மீனாட்சியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின்போது கருணாநிதியுடன் அவருடைய மனைவி ராஜாத்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் இருந்தனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 16-ம் தேதி நடக்கிறது. இந் நிலையில், கடந்த 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அன்று ஒரு சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 83 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை தினங்கள் என்பதால் மனு தாக்கல் இல்லை.

இதையடுத்து, இன்று (திங்கள்கிழமை) மீண்டும் மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று மாலை திருவாரூரில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.

2-வது முறை..

சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x