Published : 10 Apr 2016 10:25 AM
Last Updated : 10 Apr 2016 10:25 AM

பீர்க்கன்கரணை ஏரி அருகே குப்பைகளை அகற்றும் விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்கவேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பீர்க்கன்கரணை ஏரி அருகே குப்பை களை அகற்றும் விவகாரம் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பீர்க்கன் கரணை ஏரி அருகே குப்பைகளைக் கொட்டி மாசு ஏற்படுத்தி வருவதாக, நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு தாமாக முன் வந்து விசாரணை நடத்தி, அங்கு உள்ள குப்பைகளை அகற்ற காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.4 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு குப்பைகள் அகற்றப்படுவதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் பீர்க்கன்கரணை பேரூராட்சி சார்பில், குப்பைகளை அகற்றிவிட்டதாக அமர்வில் தெரிவிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யாஸ்மின் அலி, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஆய்வு செய்தபோது, அங்கு குப்பைகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்று தெரிவித்தார். பீர்க்கன்கரணை பேரூராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்மணி, 5-ம் தேதி குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் அங்கு நேரில் சென்று குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டனவா என்று ஆய்து செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குப்பைகள் அகற்றப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x