Published : 09 Mar 2022 01:27 PM
Last Updated : 09 Mar 2022 01:27 PM

கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடி: மநீம வரவேற்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ்.

சென்னை: கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடியான தீர்ப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்றுள்ளது.

டந்த 2015-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநரான அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோகுல்ராஜ்

இதனிடையே, நீதிமன்ற உத்தரவினை வரவேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளது:

அதில் "கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்பட்ட இதர 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சற்றே தாமதிக்கப்பட்ட நீதியெனினும் சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x