Published : 02 Apr 2016 08:16 AM
Last Updated : 02 Apr 2016 08:16 AM

நாம் தமிழர் கட்சி அறிவித்த ஆலங்குடி வேட்பாளர் மாற்றம்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தரசனின் மனைவி தமிழ்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, தொகுதியில் பல்வேறு இடங்களில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்ற நிலையில் வேட்பாளர் தமிழ்செல்வி, கட்சி நிர்வாகி களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x