Published : 06 Mar 2022 03:47 PM
Last Updated : 06 Mar 2022 03:47 PM

கடலோர மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது . இது இன்று காலை மேலும்‌ வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ தென்மேற்கு திசையில்‌ தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும்‌ வலுவிழக்க கூடும்‌. இதன்‌ காரணமாக, கடலோர தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக் கூடும்‌. விழுப்புரம்‌, கடலார்‌, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, அரியலார்‌, பெரம்பலார்‌, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ பகுதி, வடதமிழக மற்றும்‌ தெற்கு ஆந்திர கடலோரப்பகுகிகளில்‌ அடுத்த 12 மணி நேரத்தில்‌ சூறாவளி காற்று மணிக்கு 3 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே மணிக்கு 56 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில்‌ பலத்த காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே மணிக்கு 5௦ கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

எனவே, மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு 07.03.2022 காலை வரை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x