Published : 26 Apr 2016 08:41 AM
Last Updated : 26 Apr 2016 08:41 AM

நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வணிகவரி துறையில் தனிப் பிரிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வணிகவரித் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

வரி மதிப்பீடு தொடர்பாக வணிக வரித் துறை அனுப்பிய நோட்டீஸ் களை ரத்து செய்யக் கோரி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகளைத் தொடர்ந்தது. இந்த வழக்குகளை விசாரித்து நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

சட்டப்படி வரி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மேல்முறையீடு முடிவுக்கு வரும் வரைதான் மதிப்பீட்டு அதிகாரிகள் காத்திருக்க வேண்டும். வரி மதிப்பீடு செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில் உடனடியாக வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி கணக்குகள் முடக்கப்பட்டால் அது தொடர்பான உத்தரவு நகல் உடனடியாக கணக்குதாரருக்கு அனுப்ப வேண்டும். மேல்முறையீட்டு காலத்துக்கு பிறகும் வரி வசூல் செய்யப்படாமல் இருந்தால் அது தொடர்பாக வணிகவரித் துறை இணை ஆணையர்கள் விசாரணை நடத்த வேண்டும். மதிப்பீட்டு அதிகாரிகள் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்புவதோடு நின்றுவிடாமல் வரியை வசூல் செய்வதும் அவர்களின் கடமையாகும்.

நீதிமன்றம் மற்றும் மேல்முறை யீட்டு ஆணையத்தின் உத்தரவுகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை நடத்துவதற்கான செலவை சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். இதற்காக அரசு செலவு செய்யக்கூடாது.

வணிகவரித் துறையினர் வழக்கு களை தொடர்ந்து கண்காணித்து இணை ஆணையர்களுக்கு உடனுக் குடன் தகவல் அளிக்க வேண்டும். இணை ஆணையர்கள் வழக்குகளை தவறாமல் கண்காணிக்க வேண் டும். வணிகவரித் துறையில் நீதிமன்ற உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு ஒன்றை ஆணையர் அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x