Published : 17 Feb 2022 06:20 AM
Last Updated : 17 Feb 2022 06:20 AM

சசிகலா, அப்போலோ தரப்பு வழக்கறிஞர்களுடன் - ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாமற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில், இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்குதொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

விசாரணை ஆணையத்துக்கு உதவ, எய்ம்ஸ் மருத்துவர் நிகில்டாண்டன் தலைமையில் 6 பேர்கொண்ட மருத்துவக் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆணையத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி மீண்டும் விசாரணை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்கூறும்போது, “நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கிய 10 நாட்களுக்குள் நான்எனது முழு விசாரணையை முடித்து விடுவேன். சசிகலா குறித்து விவாதிக்கப்பட்ட தகவல்களை எழுத்துப்பூர்வமாக ஆணையம் கேட்டுள்ளது. அதை வரும்22-ம் தேதிக்குள் கொடுப்பதாக கூறியிருக்கிறேன். இதேபோல அப்போலோ தரப்பு விளக்கங் களையும் 22-ம் தேதிக்குள் வழங்க ஆணையம் கூறியிருக்கிறது. யாரையெல்லாம் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x