Published : 12 Feb 2022 06:19 AM
Last Updated : 12 Feb 2022 06:19 AM

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் விதிகளில் திருத்தம்: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கொள்கை விதிகளில் திருத்தம் செய்து புதிய அரசாணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜன.24 -முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமாறுதல் கலந்தாய்வு கொள்கை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் ‘‘பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய பணியிடங்களில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

இந்த புதிய விதிமுறையை நிர்வாக மாறுதலுக்கும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கிடையே நேற்றும், இன்றும் (பிப்.11, 12) நடைபெறவிருந்த முதுநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

தற்போதைய பணியிடங் களில் ஓராண்டு பணிபுரிந் திருக்க வேண்டும். இல்லை யெனில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x