புதுச்சேரியில் புதிதாக 431 பேருக்குக் கரோனா தொற்று உறுதி; 3 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று(பிப். 4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"புதுச்சேரி மாநிலத்தில் 2,686 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 279 பேர், காரைக்காலில் 109 பேர், ஏனாமில் 34 பேர், மாஹேவில் 9 பேர் என மொத்தம் 431 (16.05 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1 லட்சத்து 63 ஆயிரத்து 563 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 115 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,343 பேரும் என மொத்தமாக 5,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், புதுச்சேரி வாழைக்குளம் 79 வயது முதியவர், முத்தியால்பேட்டை 73 வயது முதியவர், காரைக்காலைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,946 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. புதிதாக 1,608 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 159ஆக உள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 15 லட்சத்து 40 ஆயிரத்து 256 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன."

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in