Last Updated : 29 Jan, 2022 02:58 PM

 

Published : 29 Jan 2022 02:58 PM
Last Updated : 29 Jan 2022 02:58 PM

புதுச்சேரியில் 855 பேருக்கு கரோனா தொற்று: 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 855 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 29) வெளியிட்டுள்ள தகவலில், ‘புதுச்சேரி மாநிலத்தில் 3,465 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 570, காரைக்கால்- 172, ஏனாம்- 102, மாஹே- 11 என மொத்தம் 855 (24.68 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 59 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 182 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,360 பேரும் என மொத்தமாக 12,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக புதுச்சேரி தேத்தாம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர், காரைக்கால் நிரவியைச் சேர்ந்த 67 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,923 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. புதிதாக 2,604 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 359 (90.95 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 15 லட்சத்து 31 ஆயிரத்து 595 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x