Published : 24 Apr 2016 09:52 AM
Last Updated : 24 Apr 2016 09:52 AM

திண்டுக்கல் நகரில் காருக்குள் மகளுடன் டாக்டர் தற்கொலை

காரில் அமர்ந்த நிலையில் மகளு டன் திண்டுக்கல்லை சேர்ந்த மயக்க வியல் சிகிச்சை நிபுணர் தற் கொலை செய்துகொண்டார். இவர் கள் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் நகரின் மையப் பகுதியான ஆர்.எம்.காலனியில் ஒரு காரில் இருவர் அமர்ந்தி ருந்த நிலையில் நீண்டநேரம் இருந் தது தெரிந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்த னர். இதைத் தொடர்ந்து திண்டுக் கல் நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் வைரம் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். காரில் அமர்ந்திருந்த நிலையில் இருவர் இறந்துகிடந்தது தெரிந்தது. காருக் குள் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. விசாரணையில் இறந்தவர்கள் டாக்டர் சோமசுந்தரம், அவரது மகள் வழக்கறிஞர் வானதி என்றும் தெரியவந்தது.

திண்டுக்கல் அருகே நந்த வனப்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற டாக்டர் சோமசுந்த ரம்(62). மயக்கவியல் சிகிச்சை நிபுணர். இவரது 2-வது மகள் வழக்கறிஞர் வானதி(27). இவ ருக்கும் மதுரை மாவட்டம், திருமங் கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயனுக்கும் திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த இரு மாதங் களாக கணவரைப் பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது சகோதரியின் குழந்தைக்கு பழநியில் நடைபெற்ற முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச் சிக்கு தந்தையும், மகளும் சென்றுவந்தனர். மகளின் குடும்ப வாழ்க்கை பாதித்தநிலையில் தந்தை மனஉளைச்சலில் இருந் துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அதே நாளில் இரவு தந்தையும், மகளும் தற் கொலை செய்துகொள்ள முடி வெடுத்து காரில் நேற்றுமுன் தினம் இரவு 9 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர். சோமசுந்தரத் தின் மனைவி தங்க உமாவை (55) வீட்டில் விட்டு விட்டு சென்றுள் ளனர். நேராக திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதிக்கு வந்து காரில் அமர்ந்து, மயக்க மருந்து ஊசி செலுத்தி இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. காரில் இவர்கள் எழுதிய கடி தத்தை போலீஸார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசார ணையைத் தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் நகர் மேற்கு போலீ ஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆன நிலையில் வானதியின் இறப்பு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x