Published : 18 Apr 2016 08:26 AM
Last Updated : 18 Apr 2016 08:26 AM

பாமாயிலுக்கு மானியம் கொடுப்பதால் மலேசிய விவசாயிகளிடம் அதிமுகவினர் வாக்கு கேட்கலாம்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டல்

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப் பாளரும், மத்திய அமைச்ச ருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் நிருபர்களி டம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுகவும் அதிமுகவும் மாநிலத்தை சீரழிவுப் பாதைக்கு கொண்டு சென் றுள்ளன. கடந்த 50 ஆண்டு களாக இந்த கட்சிகளை மக்கள் விருப்பப்பட்டு தேர்வு செய்யவில்லை. ஒருவர் மேல் உள்ள வெறுப்பினால் இன்னொருவரை தேர்வு செய்தனர். ஆனால், இந்த முறை திமுக, அதிமுக மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. தமிழக மக்கள் தற்போது மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஊழலற்ற நல்லாட்சியை வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில் ஊழல் மலிந்த மோசமான ஆட்சி நடக்கிறது. ரேஷன் கார்டு வாங்குவது, மின் இணைப்பு பெறுவது என எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற, நல்ல அரசாங்கம் அமைய பாஜகவை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.

தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ அரிசிக்கு மாநில அரசு ரூ.3 மட்டுமே வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு ரூ.32.66 வழங்குகிறது.

தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்காத மாநில அரசு, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு மானியம் வழங்குகிறது. எனவே, மலேசிய விவசாயிகளிடமே அதிமுகவினர் வாக்கு கேட்கலாம்.

பாஜக முழு வேட்பாளர் பட்டியல் 2 தினங்களில் வெளியாகும். தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப் படும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு உறுதியான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x