புதுச்சேரியில் புதிதாக 444 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் புதிதாக 444 பேருக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 444 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (ஜன. 9) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,202 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 350 பேர், காரைக்காலில் 84 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 9 பேர் என மொத்தம் 444 பேருக்கு (13.87 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 100 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,150 பேரும் என மொத்தமாக 1,250 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதன் மூலம் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் உயிரிழப்பு இல்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,882 ஆகவும், இறப்பு விகிதம் 1.44 சதவீதமாகவும் இருக்கிறது. புதிதாக 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 590 (97.60 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 14 லட்சத்து 63 ஆயிரத்து 660 (2 தவணைகள் உட்பட) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in