Published : 29 Dec 2021 03:13 PM
Last Updated : 29 Dec 2021 03:13 PM

மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநரின் ரூ.294 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான ரூ.293.91 கோடி சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2014-ல் ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், அந்த வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தூத்துத்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இந்த முறைகேட்டுக்கு வங்கியின் முன்னாள் தலைவரும், இயக்குநருமான நேசமணி மாறன்முத்து உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறைநடத்திய விசாரணையில், நேசமணி மாறன்முத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறி பங்குகளை ஒதுக்கியதும் உறுதியானது. இதையடுத்து, அவருக்கு அமலாக்கத் துறை ரூ.35 கோடி அபராதம் விதித்தது.

அவர், சிங்கப்பூரில் 2 நிறுவனங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில், பலகோடி பணத்தை சிங்கப்பூர் டாலராக முதலீடு செய்ததையும் அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அவருக்குச் சொந்தமான, ரூ.293.91கோடி மதிப்பிலான சொத்துகளைபறிமுதல் செய்து, நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x