Published : 23 Dec 2021 03:11 PM
Last Updated : 23 Dec 2021 03:11 PM

டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.25) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “நாளை மறுநாள் முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x