Published : 21 Dec 2021 09:57 AM
Last Updated : 21 Dec 2021 09:57 AM

கடலூர் சிப்காட் பகுதியில் மரத்தில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

கடலூரில் நேற்று அதிகாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியைச் சேர்ந்தவர் ராமு (65), விவசாயி. இவரது மனைவி லலிதா (59). இருவரும் சென்னை ஆவடியில் உள்ள மருமகன் ரமேஷ் (தொழிலதிபர்) வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் காரில் புறப்பட்டுள்ளனர். ஓட்டுநர் கோதண்டம் (50) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

நேற்று அதிகாலை கடலூர் சிப்காட் வழியாக சென்றபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் லலிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமுவும், கோதண்டமும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர். கடலூர் துறைமுகம் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x