Published : 04 Mar 2016 09:16 AM
Last Updated : 04 Mar 2016 09:16 AM
தமனி அடைப்புகளை நீக்க தமிழ கத்தில் முதல்முறையாக கிராஸ் பாஸ் கதீட்டர் சிகிச்சை முறை சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அறிமுகம் செய்யப் பட்டது.
இதுகுறித்து சென்னை அப்போ லோ மருத்துவமனை மருத்துவர்கள் கே.ஏ.ஆப்ரஹாம், ஆனந்த் ஞானராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் கிராஸ்பாஸ் கதீட்டர் சிகிச்சை முறை முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ள தமனிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். தமனி அடைப்புகளை சரிசெய்ய பல ஆண்டுகளாக பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இப்போது கிராஸ்பாஸ் கதீட்டர் சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதில், மிகவும் குறைவான அளவில் தழும்பு மட்டுமே ஏற்படும். 3 நாட்களுக்கும் குறைவாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம். நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
இவ்வாறு அப்போலோ மருத்துமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT