Last Updated : 17 Dec, 2021 12:51 PM

 

Published : 17 Dec 2021 12:51 PM
Last Updated : 17 Dec 2021 12:51 PM

நெல்லை அருகே தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவர்கள் பலி

நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள பள்ளியில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை பொருட்காட்சி திடல் அருகே, 100 ஆண்டுகள் பழமையான பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

விபந்து நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x