Published : 16 Dec 2021 05:29 PM
Last Updated : 16 Dec 2021 05:29 PM

சென்னையில் டிச.18-ம் தேதி எங்கெங்கு ஒரு நாள் மின் தடை?

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்கு ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 18.12.2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பிற்பகல் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி: ராதா நகர், புருஷோத்தம்மன் நகர் மெயின் ரோடு மற்றும் 3-வது குறுக்குத் தெரு, என்.ஜி.ஓ காலனி மெயின் ரோடு, அஸ்த்தினாபுரம் மெயின் ரோடு, பஜனை கோயில் தெரு, மாருதி நகர், நேரு தெரு, காட்டேரி அம்மன் நகர், கடப்பேரி குளக்கரை தெரு லட்சுமிபுரம், ராஜீவ் காந்தி தெரு, ஒடப்பாளையம், சாமூண்டிஸ்வரி நகர், ஸ்ரீபுரம், சிவசங்கரன் தெரு, கிருஷ்ணா நகர், பெரியாழ்வார் தெரு, திருமழிசை தெரு, திருப்பானூர் தெரு, கோவிலம்பாக்கம் வடிவேல் நகர், கோபால் நகர், ஏழுமலை சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, விஜயலட்சுமி நகர், இந்திரா நகர், அருள் முருகன் நந்தவனம் நகர் மற்றும் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

துரைபாக்கம் பகுதி: சாய் நகர் - முதலாவது தெரு முதல் 13-வது குறுக்குத் தெரு முழுவதும், செல்வகணபதி அவென்யூ, செல்வகுமார் அவென்யூ, ஆறுமுகம் அவென்யூ, பெத்தெல் நகர் பி,டி.சி காலனி சுப்ரமணியன் தெரு, சந்திரசேகர் நகர், கண்ணதாசன் நகர் மற்றும் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பல்லாவரம் பகுதி: ராணுவக் குடியிருப்பு, தாஜ் ஃபிளைட் கிச்சன், பி,பி,சி,எல், எல் & டி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம்.

மாதவரம் பகுதி: மாதவரம் ஜி.என்.டி ரோடு பகுதி, சிவ கணபதி நகர், ஜவஹர்லால் நேரு 200 அடி பகுதி ( குளத்தூர் சிக்னல் முதல் மாதவரம் வட்டம்) மற்றும் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்."

மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x