Published : 15 Mar 2016 09:06 AM
Last Updated : 15 Mar 2016 09:06 AM

என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ விலகல்

கடந்த 2011-ல் காங்கிரஸ் கட்சியி லிருந்து ரங்கசாமி விலகியபோது அரசு கொறடாவாக இருந்த அங்காளனும் ராஜினாமா செய்து, ரங்கசாமி தொடங்கிய என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து திருபுவனை தனித் தொகுதியில் 3-வது முறையாக எம்எல்ஏவானார். பிப்டிக் சேர் மனாகவும் கட்சியின் செய லாளராகவும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அங்காளன் தனது கட்சிப் பத வியை ராஜினாமா செய்தார். அடிப்படை உறுப்பினர் பதவி யிலிருந்தும் விலகினார். இதற் கான கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று மதியம் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் ரங்கசாமி எனக்கு சரியான மரியாதை தரவில்லை. எனது ஆதரவாளர்க ளுடன் பேசி அடுத்தக்கட்ட முடிவை தெரிவிப்பேன் என்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவரது ஆதரவாளர்கள் அங்காளன் மீண்டும் காங்கிரஸில் சேர திட்டமிட்டுள்ளதாக தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x