Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM
விருத்தாசலம் அருகே சுடு காட்டை மழைநீர் சூழ்ந்ததால் ஊருக்குள்ளேயே சடலத்தை எரித்து வருகின்றனர் கிராம மக்கள்.
விருத்தாசலம் அருகே க.இள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மனைவி ராஜேஸ்வரி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த இரு தினங் களாக பெய்த கனமழையால் கிரா மத்தில் வீதி முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இருப்பினும் ராஜேஸ்வரியின் உறவினர்கள் வீட்டில் இறுதிச் சடங்கு முடித்து, அவரது உறவினர்கள் அவரது உடலை எரிக்க சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது,சுடுகாடு முழுவதும் தண்ணீர் சூழந் திருந்தது. மயானக் கொட்ட கையும் தண்ணீர் நிரம்பியிருந்தது.
இதையடுத்து என்ன செய்வ தென்று திகைத்தவர்கள், அந்த கிராமத்தில் உள்ள குடியி ருப்புகள் நிறைந்த பகுதியில் சாலையின் ஓரத்திலேயே சட லத்தை தீ மூட்டியுள்ளனர். கன மழை காலங்களில் இறுதிச் சடங்கில் கூட இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், சுடுகாட்டை மேடானபகுதியில் அமைத்து அவை செல்லும் வழியில் வடிகால் வசதிஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்துள்ளனர் அக் கிராம மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT