Published : 04 Mar 2016 11:02 AM
Last Updated : 04 Mar 2016 11:02 AM
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கடற்கரை - அரக் கோணம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்பு பணி காரணமாக நாளை (5-ம் தேதி) முதல் 8-ம் தேதி வரை, கடற்கரையில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு அரக்கோணம் புறப்படும் மின்சார ரயில் பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு, புட்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
இந்த 4 நாட்களும் மேற்கண்ட ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழியில் புறநகர் மின்சார ரயில் செல்லும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு காலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் 15 நிமிடங்கள் கால தாமதமாக இயக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT