Published : 11 Nov 2021 08:46 PM
Last Updated : 11 Nov 2021 08:46 PM

உங்கள் சேவை மகத்தானது: முன்களப் பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், காவலர்கள், மின் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரது சேவையையும் போற்றுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:

தொடர் மழை - அளவுக்கு அதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர் துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்!

உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x