Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு அருகே மரணத்திலும் இணைபிரியாத கணவன், மனைவி

கண்ணகி, சேகர். (கோப்புப்படம்).

திருவண்ணாமலை

படைவீடு அருகே கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந் துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படைவீடு அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் வசித்தவர் மண்பாண்ட தொழிலாளி சேகர்(63). இவர், உடல்நிலை பாதிக் கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல், வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கண்ணகி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவரும், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை கண்ணகி உயிரிழந்தார்.

சுமார் 30 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்ந்து வந்த கணவன் – மனைவி, மரணத்திலும் இணை பிரியாமல் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x