Published : 05 Nov 2021 11:34 AM
Last Updated : 05 Nov 2021 11:34 AM

தீபாவளி கொண்டாட்டம்: ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை

பிரதிநிதித்துவப்படம்

தமிழகம்

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக இரண்டே நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான 3ஆம் தேதி 205.61 கோடி ரூபாய்க்கும், தீபாவளி தினத்தன்று மட்டும் 225.42 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 98.89 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 89.95 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 87.89 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தலைநகரான சென்னையில் மட்டும் ரூ.79.84 கோடிக்கும், கோவையில் ரூ.74.46 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியில் மட்டும் ரூ.467.69 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x