Published : 24 Mar 2016 07:23 AM
Last Updated : 24 Mar 2016 07:23 AM

மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலுக்கு உடந்தை: அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் தெக்கலூரைச் சேர்ந்த டி.பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அவினாசி தாலுகாவில் உள்ள தெக்கலூர் பஞ்சாயத்து தலை வரின் பெயரைக்கூறி, பவானி சாகர் ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக கிராவல் மற்றும் மணல் அள்ளப்படுகிறது. இதை தடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி களுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு கடந்த 10.3.15 மற் றும் 23.4.15 ஆகிய நாட்களில் விசாரணைக்கு வந்தது. அப் போது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள எக்காரணம் கொண் டும் அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

ஆனால் இந்த உத்தரவை மீறி, ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து மணல் அள்ள அனுமதி வழங் கப்பட்டதாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜன், பவானி சாகர் வடிநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடராஜன், அவினாசி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது டி.பிரபா கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி இன்ஸ் பெக்டர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதைப்படித்த நீதிபதிகள், ‘‘இறந்தவர்களின் பெயர்களிலும், விண்ணப்பிக்காத வர்களின் பெயர்களிலும்கூட மணல் அள்ள அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். மணல் அள்ள அனுமதி பெற்றவர்கள், பெர்மிட்டில் உள்ள கையெழுத்து தங்களுடையது இல்லை என மறுக்கின்றனர். விவசாயிகள் என்ற போர்வையில் ஒரு கும்பல் இந்த சட்டவிரோத கிராவல் மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அதை தடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளே அந்த கும் பலுக்கு உடந்தையாக செயல் பட்டிருப்பது சிபிசிஐடி போலீ ஸாரின் அறிக்கை மூலமாக தெரிகிறது.

இந்த வழக்கைப் பொருத்த மட்டில் தவறு செய்த அதிகாரி கள் மீது வழக்குப்பதிய போதிய முகாந்திரம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது சிபிசிஐடி போலீ ஸார் வழக்குப்பதிந்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குப்பதிய அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும் என நடைமுறை இருந்தால், இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்க வேண்டும். தமிழக அரசு அந்த மனுவை 15 நாட்களுக்குள் பரிசீலித்து அனுமதியளிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும், சிபிசிஐடி போலீஸாரும் தனித்தனியாக வரும் ஜூன் 27-ம் தேதிக்குள் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x