Published : 16 Mar 2016 03:54 PM
Last Updated : 16 Mar 2016 03:54 PM
தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் விவகாரம் குறித்து இன்று மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக எம்பி எஸ்.முத்துகருப்பன், ‘‘தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். எனவே மீனவர்களை காப்பாற்ற இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வேண்டும்’’ என்றார்.
திமுக எம்பி திருச்சி சிவாவும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார். இம்மாதத்தில் மட்டும் நான்கு முறை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பூஜய் நேரத்தின் போது கூட்டுக் கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா, ‘‘மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகளும், மருந்து கம்பெனிகளும் நீண்ட ஆண்டுகளாக நாடு முழுவதும் புழங்கி வந்தவை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த மருந்துகளின் பெயர்களையும், மருந்து கம்பெனிகளின் பட்டியலையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT