Published : 20 Mar 2016 12:12 PM
Last Updated : 20 Mar 2016 12:12 PM
வணிகத்துக்காக பணம் எடுத் துச் செல்லும் வியாபாரிகள் என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கக் கோரி தேர்தல் அதிகாரியிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலை வர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:
பறக்கும் படையினர் சோதனை யின்போது சிறிய, நடுத்தர வணிகர் கள் கொள்முதலுக்கு கொண்டு செல்லும் பணம், பொதுமக்கள் சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய் யப்படுகிறது. உரிய ஆவணங் களை காட்டிய பிறகும் பணத்தை திரும்பப் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர்.
வணிகத்துக்காக பணம் எடுத்துச் செல்லும் வியாபாரிகள், என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தெளிவான அறிவிப்பு இதுவரை தேர்தல் ஆணையத்தால் வெளி யிடப்படவில்லை. எனவே, இது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும். எவ்வித ஆவணமும் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங் களை ஆய்வு செய்யும் காவல் துறையினரும் வருவாய்த்துறை யினரும் வணிகர்கள், பொது மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
வாகன எண், ஆர்.சி. நகல், வாகனத்தில் இருப்போரிடம் ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை வாங்கலாம். ஆனால், பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது. வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பிற லஞ்சத்தை ஊக்குவிப்பதாக இருக்கக் கூடாது.
பெண்கள் செல்லும் வாக னங்களை ஆட்கள் இல்லாத இடத்தில் நிறுத்தக்கூடாது. பெண்களின் உடைமைகளை சோதனையிடக்கூடாது. வாகன சோதனையை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT