Published : 16 Mar 2016 06:57 PM
Last Updated : 16 Mar 2016 06:57 PM
மார்க்சிஸ்ட் ஊழியரை படுகொலை செய்தவர்கள் மீதும், போதைப்பொருள் வியாபாரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை அரசு பொது மருத்துவமனை பின்புறமுள்ள காந்திநகர் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை குறித்தும், சமூக விரோதிகள் குறித்தும் பலமுறை காவல்துறையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாயன்று மார்க்சிஸ்ட் ஊழியர் முகிலன் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளின் மீது காவல்துறையும், அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் சமூக விரோதிகளின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT