Last Updated : 01 Oct, 2021 04:04 PM

 

Published : 01 Oct 2021 04:04 PM
Last Updated : 01 Oct 2021 04:04 PM

புதுச்சேரியில் 64 பேருக்கு கரோனா தொற்று

புதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை 97.92 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (அக்.1)வெளியிட்ட தகவலில், “ புதுச்சேரி மாநிலத்தில் 5,365 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-38, காரைக்கால்- 16, ஏனாம்-1, மாஹே- 9 பேர் என மொத்தம் 64 பேருக்கு (1.19 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 114 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 677 பேரும் என 791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,840 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் நீடிக்கிறது. புதிதாக 103 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 800 (97.92 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 9 ஆயிரத்து 289 பேருக்கு (இரண்டு டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x