Published : 20 Mar 2016 05:06 PM
Last Updated : 20 Mar 2016 05:06 PM
கட்டாயப்படுத்தி கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழிசை டெல்லி சென்றார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழிசை கூறியதாவது:
''சட்டமன்றத் தேர்தலில் தனித்துவமான கூட்டணியாக பாஜக போட்டியிடும். விருப்பமில்லாதவர்களுடன் கூட்டணி வைக்க பாஜகவும் விரும்பவில்லை. கட்டாயப்படுத்தி கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக எங்களுடன் இணைந்து போட்டியிட்டது. அந்த காரணத்தால் தற்போதைய சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்காக அணுகினோம்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT