Published : 02 Feb 2016 09:18 AM
Last Updated : 02 Feb 2016 09:18 AM

நெல்லையில் 7-ம் தேதி சமக பொதுக்குழு

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நெல்லையில் வரும் 7-ம் தேதி நடக்கவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவசர பொதுக்குழுக்கூட்டம் திருநெல்வேலி கேடிசி நகர் மாதா மாளிகையில் வரும் 7-ம் தேதி காலை 10 மணியளவில் நடக்கவுள்ளது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது, கூட்டணி முடிவு எடுப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x