Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM
சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில், 5 நாட்களுக்கு இலவச பொது சுகாதார மருத்துவ முகாம் நடைபெறஉள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், போர்ட்டீஸ் மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை ரயில் நிலையங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, வரும் 20-ம் தேதி சென்னை சென்ட்ரல், விம்கோ நகர் மெட்ரோவிலும், வரும் 22-ம் தேதி தியாகராயநகர் மற்றும் கிண்டி மெட்ரோவிலும், வரும் 24-ம் தேதி உயர் நீதிமன்றம், ஷெனாய் நகர் மெட்ரோவிலும், வரும் 27-ம் தேதி புதுவண்ணாரப்பேட்டை, வடபழனி மெட்ரோவிலும், வரும் 29-ம் தேதி அரசினர் தோட்டம், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த முகாம் நடக்கிறது.
காலை 10 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இந்த மருத்துவ முகாம் நடக்கிறது. பி.எம்.ஐ, ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த சர்க்கரை, வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.மேலும், தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடையுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT