Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு அளித்த அப்பாவு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு 1 லட்சம் பனை விதைகளை ஏற்றிய லாரிகளை ராதாபுரத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

திருநெல்வேலி

தமிழக சட்டப்பேரவையில் ஆக.14-ல் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கலானது.

அப்போது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ``ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் அரசுக்கு அளிக்கிறேன்’ என்று தெரிவித்தார். அதன்படி, ராதாபுரத்தில் இருந்து முதல்கட்டமாக 1 லட்சம் பனை விதைகளை லாரிகளில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார். பனை விதைகளை ஏற்றிய லாரிகளை அவர் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, ``மழை ஈர்ப்பு மையம், நீர்நிலைகளின் காவலன் என்றெல்லாம் அழைக்கப்படும் பனைமரங்கள் அழிந்து வருகின்றன. அதை காப்பாற்ற ஏரிக்கரைகளிலும் சாலை ஓரங்களிலும் பனை மரங்களை வளர்ப்பதற்கு பனைமர பெருக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு அளிக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x