Published : 17 Jun 2014 12:08 PM
Last Updated : 17 Jun 2014 12:08 PM

பொறியியல் மாணவர் சேர்க்கை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுக்கு கூடுதல் அவகாசம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில், தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்க உத்தரவிடக் கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x