Last Updated : 01 Feb, 2016 08:59 AM

 

Published : 01 Feb 2016 08:59 AM
Last Updated : 01 Feb 2016 08:59 AM

50 எம்பிபிஎஸ் இடங்களுடன் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளை: ஜூலையில் தொடங்க முடிவு

புதுச்சேரி பிராந்தியமான காரைக் காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி யின் கிளை வரும் ஜூலை மாதம் முதல் 50 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்படுகிறது.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கடந்த 1823-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் "எக்கோல் தி மெடிசின் பாண்டிச்சேரி" என்ற பெயரில் நிறுவப்பட்டது. பிரெஞ்சு இந்திய ஒப்பந்த மாறுதல் அடிப்படையில் தன்வந்திரி மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட்டது. பின்னர் அந்த கல்லூரி மண்டல முதுநிலை மருத்துவக் கல்லூரியாக, மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறையால் நேரு நினைவாக, ஜிப்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது 5,500 படுக்கை களுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் தென் னிந்தியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 141 இடங் கள் அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தி நிரப்பப் படுகிறது. மீதமுள்ள 9 இடங்களில் 5 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும். 4 இடங்கள் மத்திய சுகாதார அமைச்சகம் மூலம் நிரப்பப்படும்.

தற்போது புதுச்சேரி பிராந் தியத்தின் ஒரு பகுதியாக காரைக்காலில் ஜிப்மர் கிளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசு காரைக்காலில் மருத்துவக்கல்லூரி தொடங்கு வதற்கு தேவையான நிலத்தை ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஒதுக்கி யுள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜிப்மர் இயக்கு நர் டாக்டர் எஸ்.சி.பரிஜா கூறுகையில், “வரும் ஜூலை மாதம் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை காரைக்காலில் 50 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்படுகிறது. பொதுப் பணித் துறைக்கு சொந்தமான பழைய கட்டிடங்களில் தற்காலிக மாக மருத்துவக் கல்லூரி இயங்கும். 2 ஆண்டுகளில் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு அங்கு மருத்துவக் கல்லூரி மாற்றப்படும். மருத்துவப் பயிற்சி அளிக்க காரைக்கால் அரசு மருத்துவமனை தற்போது பயன்படுத்திக் கொள்ளப்படும்” என்றார்.

புதுச்சேரிக்கு வாய்ப்பில்லை

அதே நேரத்தில் புதுச்சேரியி லுள்ள ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்களை உயர்த்த வாய்ப்பில்லை என்று ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக புதுச்சேரி பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கூறியதாவது: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுவதால் ஆண்டுதோறும் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவர்களின் தேவையை கருத்தில் கொண்டு பாரம்பரிய மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள் 100 இடங்கள் வரை கூடுதலாக அதிகரித்துக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடங்களை அதிகரித்துள்ளன. ஆனால், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் இடங் களின் எண்ணிக்கையை உயர்த் தவில்லை. மொத்தமுள்ள 150 இடங்களில் 40 எம்பிபிஎஸ் இடங்கள் புதுச்சேரி மாணவர் களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஜிப்மர் இடங்களை அதிகரித்தால் புதுச்சேரி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும். இடத்தை உயர்த்தாததால் இந்த வாய்ப்பு நழுவுகிறது என்று குறிப்பிட்டனர்.

ஜிப்மர் வட்டாரங்களில் கேட்டதற்கு, “நடப்பாண்டும் புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்குத்தான் சேர்க்கை நடக்கும். இடங்கள் அதிகரிக்கப்படவில்லை” என்ற னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x