Published : 27 Feb 2016 10:17 AM
Last Updated : 27 Feb 2016 10:17 AM
சென்னை மாநகராட்சி கூட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் உறுப் பினர்கள் சார்பில் மொத்தம் 477 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி கூட் டத்தில், மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் நவம்பர் 2011 முதல் ஜனவரி 2016 வரை 53 மன்றக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவை 146 மணி, 49 நிமிடங்கள் நடை பெற்றுள்ளன.
இதில் நான் 59 மணி 36 நிமிடங்கள் பேசியிருக்கிறேன். இந்த கூட்டங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 139 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மன்றக் கூட்டங்களில் 97 உறுப் பினர்கள் 477 கேள்விகளை எழுப் பியுள்ளனர். அதில் 116-வது வார்டு உறுப்பினர் பி.சீனிவாசன் (அதிமுக) அதிகப்படியாக 24 கேள்விகளை கேட்டுள்ளார்.
91-வது வார்டு உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் (காங்கிரஸ்), 1-வது வார்டு உறுப்பினர் எ.தமிழரசி (அதிமுக), 80வது வார்டு உறுப்பினர் ஜி.ஆர்.சீனி வாசன் (அதிமுக) ஆகியோர் தலா 22 கேள்விகளை கேட்டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT