Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

தமிழகத்தில் வழக்கிழந்த 89 சட்டங்களை நீக்க மசோதா: பேரவையில் அமைச்சர் ரகுபதி தாக்கல்

சென்னை

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த நிலையில், சட்ட முன்வடிவை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவுக்கான நோக்க காரண உரையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையமானது, பல்வேறு இயற்றுச்சட்டங்கள் மிகவும் பழமையானதாக மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கும் சட்டங்களை நீக்குவதற்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், மத்திய அரசின்சட்டமியற்றும் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் ஆகியவை 1858-ம் ஆண்டு தமிழ்நாடுகட்டாய தொழிலாளர் சட்டத்தை நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளது. மாநில சட்ட ஆணையம் மற்றும் மத்திய அரசின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயுள்ள சட்டங்களை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 1858 - தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் சட்டம், 1866 - தமிழ்நாடு கால்நடை நோய் சட்டம், 1976 - தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி சட்டம் மற்றும் வேளாண் விளைபொருள் சந்தை திருத்த சட்டம், பந்தைய வரி, மாநகர காவல், பொது விற்பனை வரி உள்ளிட்ட 89 சட்டம் மற்றும் திருத்தச் சட்டங்களை நீக்குவதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன்வடிவு, பேரவைக் கூட்டத்தின் இறுதி நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x