Published : 31 Aug 2021 03:13 AM
Last Updated : 31 Aug 2021 03:13 AM
புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் அதிமுக-வை குறைகூற திமுக-வுக்கு தகுதி இல்லை என்று தருமபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம் எல் ஏ-வுமான கே.பி.அன்பழகன் நேற்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியது:
புதிய வேளாண் சட்டம் தொடர்பாக தமிழக அரசு அண்மையில் தனித் தீர்மானம் கொண்டுவந்தபோது அதிமுக வெளிநடப்பு செய்ததை திமுக-வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது என்று திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.
தமிழக விவசாயி களுக்கு திமுக வேண்டுமானால் துரோகம் இழைக்கும், அதிமுக எப்போதும் அவர்களை காக்கும் இயக்கம் என்பதை விவசாயிகள் அறிவர். வேளாண் சட்டத்தை ஆய்வு செய்து தேவையானவற்றில் மாற்றம் செய்ய வலியுறுத்தலாம் என்று கூறிய அதிமுக-வின் கருத்தை திமுக அரசு ஏற்கவே இல்லை. வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பது போன்று திமுக வேஷம் போடுகிறது. அதிமுக மீதும் காழ்ப் புணர்ச்சி காரணமாக தவறான கருத்தை பரப்பி வருகிறது. வேளாண் சட்ட விவகாரத்தில் அதிமுக-வை குறைகூற திமுக-வுக்கு எந்த தகுதியும் இல்லை.
இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சி யின்போது, பாப்பிரெட்டிப்பட்டி எம் எல் ஏ கோவிந்தசாமி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT