Last Updated : 18 Aug, 2021 04:01 PM

 

Published : 18 Aug 2021 04:01 PM
Last Updated : 18 Aug 2021 04:01 PM

புதுச்சேரியில் 151 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஆக. 18) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,424 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 83, காரைக்கால் - 32, மாஹே - 36 பேர் என மொத்தம் 151 (2.78 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 169 (புதுச்சேரி-94, காரைக்கால்-26, ஏனாம்-5, மாஹே-44) பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 764 (புதுச்சேரி-483, காரைக்கால்-129, ஏனாம்-9, மாஹே-143) பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 933 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், புதிதாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,805 ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது.

புதிதாக 74 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 804 (97.77 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 15 லட்சத்து 90 ஆயிரத்து 909 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 922 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரத்து 322 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x