Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கோரிக்கை

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில், விளாத்திகுளம் திமுகஉறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் பேசும்போது, ‘‘முன்னாள்முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில், 3 ஆண்டுகளாக விசாரணை நடக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து,தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, அதுகுறித்து விவாதிக்க முடியாது. இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

பேரவை துணைத் தலைவர்கு.பிச்சாண்டி: அவர் மேலோட்டமாக பேசியதால், நீக்குவதற்கு அவசியம் இல்லை.

அவை முன்னவர் துரைமுருகன்: வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மேலோட்டமாக பேசலாம்.

ஓ.பன்னீர்செல்வம்: மருத்துவமனை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளது. எனவே தான் அதை நீக்கக் கோரினேன்.

கு.பிச்சாண்டி: அவர் பேசியதும், நீங்கள் பேசியதும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x