Published : 17 Feb 2016 08:45 AM
Last Updated : 17 Feb 2016 08:45 AM

2.61 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

சுய உதவிக் குழுக்களை அடிப்படையாக கொண்டு 12 ஆயிரத்து 524 பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் ரூ.6 ஆயிரத்து 356 கோடி சேமிப்பு செய்துள்ளன. ரூ.25 ஆயிரத்து 785 கோடி கடன் பெற்றுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 690 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, 2 லட்சத்து 61 ஆயிரத்து 784 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. 414 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 881 இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 2023-ம் ஆண்டுக்குள் 2 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 146 கோடி செலவில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 721 நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 142 கோடி ரூபாய் செலவில் 23 புதிய அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு இயக்கத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x