Published : 20 Feb 2016 08:47 AM
Last Updated : 20 Feb 2016 08:47 AM
சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 5 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை, உணவுப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன், பயிற்சிப்பிரிவு டிஜிபி கே.பி. மகேந்திரன் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே பிரிவுகளில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறைத்துறை கூடுதல் டிஜிபி எஸ்.ஜார்ஜுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சிறைத்துறை பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரான டி.கே.ராஜேந்திரனுக்கும் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி டிஜிபி நிலைக்கு உயர்த்தப்பட்டு, அதே பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிசோரம் மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வு துறையின் முதன்மை செயலரா கவும், கலால் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாகவும் உள்ள பி.சி.லல்லாம் சங்காவுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT