Published : 14 Aug 2021 11:57 AM
Last Updated : 14 Aug 2021 11:57 AM

கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையாக ரூ.40 கோடி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட்டின் 10 சிறப்பம்சங்கள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் சிறப்பம்சங்கள்:

* விளைப்பொருட்களை பெருநகர சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்க முன்னுரிமை

* 2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு

* கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

* பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கு பதப்படுத்தும் மையம்

* புரதச்சத்து மிக்க பயறு வகைகள், கூட்டுறவு சங்கங்கள் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல்

* 3.13 லட்சம் ஹெக்டேராக உள்ள பழப்பயிர் சாகுபடி பரப்பு 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.

* இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய - மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

* மானாவாரி நிலத்தொகுப்பில் பயன் தரும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்.

* பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x